×

மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு

ஆவடி: ஆவடியில் சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.ஐ. கம்பெனி அருகே, நேற்று சாலையின் நடுவே திடீரென அரை நிர்வாணத்துடன் திரிந்த வாலிபர் ஒருவர் கையில் கட்டையுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு தவறி விழுந்துள்ளனர். இதில், அவர்களின் குழந்தை கீழே விழுந்துமயக்கம் அடைந்தது. பின்னர் தாய் மற்றும் தந்தை அலறியபடி அவ்வழியே சென்ற காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் மனநலம் பாதித்த அந்த வாலிபரை மீட்டு முதலுதவி அளித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Chennai ,Tiruthani National Highway ,
× RELATED சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி...